சென்னை: கருணாநிதி நினைவுநாளையொட்டி உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர்’  திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள வழங்கினார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையால் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் பெறப்பட்ட மொத்தம் 2,581 மனுக்களில் 1,170 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இவற்றிலிருந்து 15 பயனாளிகளை நேரில் அழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவர்களில் 6 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 2 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், ஒரு பயனாளிக்கு சக்கர நாற்காலி, ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம், 2 பயனாளிகளுக்கு திறன்பேசி, 2 பயனாளிகளுக்கு காதொலி கருவி, ஒரு பயனாளிக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறைன்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.