சென்னை: கொரோனா பொதுமுடக்க காலத்தில், கற்றல் – கற்பித்தல் இடைவெளி ஏற்படுவதால், 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ‘அசைன்மென்ட்’ கொடுக்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக  தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. இடையிடையே உயர்கல்வி மாணாக்கர்களுக்கு ஆன்லைன்மூலம் பாடங்கள் போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தொடக்கக்கல்வி  மாணாக்கர்களுக்கு, அதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாததால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. எல்கேஜி, யுகேஜி மற்றும் 1முதல் 5ம் வகுப்பு மாணாக்கர்கள் கல்வியை மறந்துவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.  அவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்களும் சரியான முறையில் புரிவது இல்லை. இதனால், மாணாக்கர்கிளின்  கற்றல் திறனில் மாற்றம் ஏதும் ஏற்படாமல், கல்வித்தரம் குறைய தொடங்கியுள்ளது.

இதையடுத்து மாணாக்கர்களின் நலன்கருதி பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன்படி,   அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் Assignments வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குபடைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், கிரீட்டிங் கார்டு தயாரித்தல், படம் வரைதலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்ற Assignments களும் தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Creativity-ஐ ஊக்கப்படுத்தும் வகையில், Greeting Card தயாரித்தல், படம் வரைதல் போன்ற Assignments தரப்பட வேண்டும்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்ற Assignments தரப்பட வேண்டும்.

9, 10-ம் வகுப்பினருக்கு புத்தக விமர்சனம் போன்ற Assignments தரப்பட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் இருந்து CEO-க்களுக்கு வழங்கப்படும் Assignment-களையே, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தர வேண்டும்.

கற்றல் – கற்பித்தல் இடைவெளி இருப்பதாக தெரியவந்துள்ளதால், அதை நிவர்த்தி செய்யவே Assignment வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு.

மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட Assignments தரப்படும் போது, அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்துமுடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கல்வித்துறை அறிவுறுத்தல்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் Assignments விவரம், மாணவர்கள் சமர்ப்பிக்கும் விவரம் போன்றவற்றை உரியமுறையில் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.