நடிகர் கார்த்தி, தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘சிறுத்தை’. நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது சதுரங்க வேட்டை படத்தின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் கார்த்தி. இப்படத்தின் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.