லைக்கா நிறுவனத்தின் தயாரிப்ப்பில் , கார்த்திக் நரேன் இயக்கி வந்த ‘மாபியா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்த படத்தில் அருண்விஜய், ப்ரியா பவானி சங்கர், பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து நடிகர் அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்தில் படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.