ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி ஜோதிகா மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் அக்கா தம்பியாகவும், சத்யராஜ் இருவருக்கும் அப்பாவாகவும் நடிக்க இருக்கிறார். பேரல்ஸ் மைண்ட்ஸ் புரோடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவிம் தம்பி சூரஜ் இப்படத்தை தயாரிக்கிறார். கார்த்தியின் 20ஆவது படமாக உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் கிட்டத்தட்ட 45 நாட்கள் நடக்கும் என கூறப்படுகிறது..அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி அல்லது ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.