பெங்களூரு

கொரோனா பரவலையொட்டி வார இறுதி நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்தால் கர்நாடக மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன.  அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளில் முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டன.   ஆயினும் கொரோனா பாதிப்பு கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று கர்நாடகா மாநிலத்தில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு  தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,93,231 ஆகி உள்ளது. இந்நிலையில் இன்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.  

இந்த கூட்டத்தில் வார இறுதி நாட்களில் அமலாகும் ஊரடங்கு ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.  அதே வேளையில் மாநிலத்தில் அமலாக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   வார இறுதி ஊரடங்கு ரத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.