டில்லி

மிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்யக் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில், தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கர்நாடகா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார்.

பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் , வருகிற 16-ந்தேதி முதல் 15 நாட்களுக்குத் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆயினும், கர்நாடகாவின் கோரிக்கை தொடர்பாக மேலாண்மை ஆணையம் தற்போது வரை முடிவு எதையும் எடுக்கவில்லை.