சென்னை:
ன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வெல்வோம் என்று காங்கிரஸ் உறுதியாக தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக உடனான தொகுதி உடன்பாடு திருப்தி அளிக்கிறது என்றார்.

இதுகுறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்றும் வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம். இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்கலாடை தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் ஏற்றம்-இறக்கம் என்பது சகஜம் என்றும் கூறினார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வெல்வோம் என்று காங்கிரஸ் உறுதியாக தெரிவித்துள்ளது.