திருச்செந்தூர்

னியாரிடம் இருந்து கோடிக்கணக்கான கோவில் சொத்துக்களை திமுக அரசு மீட்டுள்ளதாகக் கனிமொழி கூறி உள்ளார்.

இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக எம்.பி., கனிமொழி கலந்துகொண்டு பேசினார்.

கனிமொழி தனது உரையில்

“திராவிட இயக்கங்கள் கோவில்களின் நிர்வாகத்தை தி கையகப்படுத்தி பெரும்பான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பான்மை மக்கள் வழிபடும் கோவில் நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளைக் களைவதற்காகவே கோவில் நிர்வாகத்தை அரசு எடுத்து நடத்தி வருகிறது.

தனியார் கையில் கோவில் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் கொடுப்பதன் மூலம், பாஜக தவறு இழைக்க நினைக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோடிக்கணக்கான கோவில்களின் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.  திமுக அரசு கோவில்களைப் பாதுகாக்கக்கூடிய அரசாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடவுளை வைத்து, மதங்களை வைத்து, ஜாதி, இனங்களை வைத்துப் பொய் பிரசாரம் செய்துகொண்டு மக்களை பிரித்து அரசியில் செய்யக்கூடியவர்களிடம் இருந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.   திராவிட இயக்க ஆட்சி என்பது எல்லோரையும் சமமாக பார்க்கக்கூடிய ஆட்சி ஆகும்.”

என்று தெரிவித்துள்ளார்.