கரூர்:
ரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக எம்பி கனிமொழி எச்சரிக்கை வித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.

இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி, “அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை எனக்கு இன்னொரு முகம் இருக்குனு சொல்லுறாரு, செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு தம்பி. திமுகவை யாரும் மிரட்டவும் முடியாது, அச்சுறுத்தவும் முடியாது, திமுக எழுந்தால் யாரும் தாங்கமுடியாது. செந்தில் பாலாஜியை மிரட்டுவதை பாஜகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி பாலியல் சம்பவம், திமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய விசாரணை நடத்தப்படும்” எனக் கூறினார்.