ற்கொலை செய்து இறந்த நடிகர் சுஷாந்த் ராஜ் புத் வழக்கில் தொடர் புடைய நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து விவாகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் உள்பட 25 சினிமா பிரபலங்களின் பெயரை சொல்லி இருப்பதாக தெரிகிறது. இது

பாலிவுட்டில் பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பாலிவிட்டில் போதை பொருள் பயன்பாடு இருப்பதாக கூறிய நடிகை கங்கனா, மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் இருப்ப தாக கூறினார். இது மகராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனா கோபப்படுத்தியது. கட்சியினர் கங்கனாவை எச்சரித்து கண்டனம் தெரிவித்தனர். சிவசேனா கட்சிக்கும் கங்கனாவுக்கும் மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் பாந்த்ரா பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரனாவத்தின் பங்களாவில் கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக மும்பை மாநகராட்சி இடித்துத் தள்ளியது.
மேலும் கங்கனா தான் போதை பொருள் அடிமையாக இருந்தாக முன்னர் அளித் திருந்த வீடியோ பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதை ஆதாரமாக வைத்து கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீ சாருக்கு மகராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.