திருச்செந்தூர்.

வரும் 13 ஆம் தேதி அன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.

திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

இந்த வருடம் வருகிற 13-ந்தேதி யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. விழாவின்போது யாக சாலையில் இருந்து ஜெயந்தி நாதர் எழுந்தருளுதல், வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேள வாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் சேர்தல், சுவாமிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன.

வரும் 18 ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18-ந்தேதி நடைபெற உள்ளதால் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காகத் தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.