காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருக்கும் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.