திரு நீரகம் (நீராகத்தான் கோயில்) – ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்.
திருநீரகம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநீரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம் ஆகும்.
மூலவர் : நீராகத்தான்
தாயார் : நிலமங்கைவல்லி
கோலம் : நின்ற கோலம்
விமானம் : ஜெகதீஸ்வர விமானம்
தீர்த்தம் : அக்ரூர தீர்த்தம்
மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்,
108 திவ்ய தேசங்களில் இத்தலம் 48 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் .
உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே இருக்கின்ற திவ்ய தேசமாகும் .
கோயிலின் உள்ளே வலது புறத்தில் தெற்கு நோக்கி அருள் தருகிறார் .
இக்கோயின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை , பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தன் 108 திருப்பதி அந்தாதியில் அக்காலத்தில் அக்ரூர தீர்த்தம் இருந்ததாகவும் , மார்கண்டயர் முனிவருக்காக பெருமாள் பிரளய வெள்ளத்தில் ஒரு பாலகனாக கண்ணன் வளர்ந்த கட்சியை காட்டி அருளியது போல் தெரிகிறது.
காஞ்சியின் மீது பகைவர்கள் படையெடுத்தபோது இக்கோயில் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது .அழிவுற்ற கோயிலின் இறைவனை திருமேனியை மட்டும் இக்கோயிலில் சன்னதி அமைத்து வழிபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது
“நீரகத்தாய்” என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “திருநீரகம்’ முற்காலத்திலே எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார்.
பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை.