பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பாவ்னி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு , சுருதி , மதுமிதா என பிக் பாஸ் வீட்டை விட்டு ஆறு பேர் வெளியேறினர்.

இதற்கிடையே நேற்றைய நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்துள்ளார். அபிஷேக்கை பார்த்து, பாவ்னி, இசை மற்றும் பிரியங்கா ஆகியோர் உற்சாகமடைந்தனர்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில், நான் இப்போது தான் உன்னுடைய ப்ரண்ட் உடன் க்ளோஸ் ஆக தொடங்கினேன் அதுக்குள்ள வந்துட்டியா? என ராஜு, அபிஷேக்கிடம் கூறுகிறார். அப்போது அருகில் இருந்த நிரூப் இனி பிரியங்காவிடம் இருந்து விலகியே இரு என்று உனக்கு வார்னிங் கூறுகிறார் என்கிறார். அதை பார்த்ததும் அபிஷேக் இனி அப்படி இருக்க மாட்டேன் என்று கூறும் காட்சிகள் உள்ளது.

இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், 50 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறோம் என கூறும் கமல், உங்கள் பார்வையில் போட்டியாளர்கள் குறித்து கூறுமாறு பார்வையாளர்களிடம் கேட்கிறார். முதலில் பேசும் நபர், ராஜு இறுதிவரை செல்ல வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார். இதனை தொடர்ந்து சிபி, ராஜு, வருண் என ஆண்கள் ஸ்டாங்காக இருக்கிறார்கள் என்கிறார். அபிஷேக் இல்லாத பிரியங்காவை பிடிக்கும் என கூற அதற்கு கமல், அபிஷேக் வந்து ஒரு நாள் தான் ஆகிறது என்றும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றும் கூறும் காட்சிகள் உள்ளது.

மூன்றாவது ப்ரோமோவில் தாமரை கண்ணாடியாக மாறி பிரியங்காவை கோபமூட்டுகிறார்.