பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர் உள்ளனர்.

நேற்று இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில், கதை சொல்லட்டுமா டாஸ்கின் போது நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு ஆக்டிவிட்டி ஏறியாவிற்கு வந்தவர்கள் அடிப்படையில் ராஜு, சிபி, பாவ்னி மற்றும் இசை இந்த டாஸ்கில் பங்கேற்பார்கள் என பிக் பாஸ் அறிவித்தார். மேலும் இந்த வீட்டில் ஜொலித்தவர் யார் என்ற தேர்வு நடைபெற்றதில் இமான் வெற்றி பெற்றதால் அவரும் இந்த டாஸ்கில் பங்கேற்பார் என பிக் பாஸ் அறிவித்தார்.

சிபி வெற்றி பெற்று இந்த வீட்டின் தலைவரானார். இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்றது, இந்த வாரம் இரண்டு, அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே நாமினேஷன் லிஸ்டில் வந்தனர். அதன்படி அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

போட்டியில் நாணயத்தை எடுக்கும்போது மாட்டிக்கொண்ட நிரூப் பிரியங்கா சுருதி ஆகியோர் பாதாள சிறைக்கு அனுப்பப்பட்டனர்.நாணயத்தை ஒருவர் கைப்பற்றுவதும் அவரிடமிருந்து மற்றொருவர் திருடுவதும் அவரிடமிருந்து வேறு ஒருவர் கைப்பற்றுவதும் மற்றும் காரசாரமான விவாதங்கள் என நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

முதல் ப்ரமோ : “கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம். ஒவ்வொரு ரூல்ஸா உடைச்சிட்டே இருக்காங்க. வாத்திய ஏமாத்தவே முடியாது” என்று தனக்கே உரிய மிடுக்கான பாணியில், பாடி லாங்குவேஜில் கமல் பேசிய வசனங்கள் பேசுகிறார்.

இரண்டாவது ப்ரோமோ : ரகசியமாக எதையோ எழுதி காட்டி, அதை யாரும் அறியாமல் கிழித்தும் போட்டுவிட்டார் என்று அக்ஷராவை சரமாரியாகக் கேள்வி கேட்ட பிரியங்காவும், யாரும் அறியாமல் மோர்ஸ் கோடு போல, கைகளால் மறைத்துக் கொண்டு நிரூப் கையில் எதையோ எழுதிக் காட்டினார். இதை கமல் கேள்வி கேட்கிறார்.

மூன்றாவது ப்ரோமோ : அபிஷேக்கை வறுத்தெடுக்கிறார் கமல் . இதுவரை பிக்பாஸ் பார்த்ததே இல்லையா என்று கிண்டலாக கேட்கிறார் . பின் என்கிட்டே மாத்தி மாத்தி பேசலையேன்னு நக்கலடிக்க பார்வையாளர்கள் கை தட்டி வரவேற்கின்றனர்.