சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல்கள் சரமாரியாக வெளிவரத்தொடங்கி உள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித் திருப்பதாவது:

சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? ‬
‪சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.
இவ்வாறு கமல்ஹாசன் கூறிஉள்ளார்.