சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் வாரிசு நடிகர், நடிகைகளை பற்றி புகார் கூறிய கங்கனா பாலிவுட்டில் போதை பொருள் உபயோகம் உள்ளது என்று குற்றச் சாட்டு சுமத்தினார் . மகாராஷ் டிரா ஆளும் சிவசேனா மீதும் குற்றச்சாட்டுக் கள் கூறினார். ’மும்பை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது’ என்றார்.


கங்கனாவின் இந்த பேச்சு பாலிவுட்டி னரையும், சிவசேனாவினரையும் கோபத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நடிகை கங்கனா, போதை மருந்து பயன்படுத்தி யதாக அவர் பேசிய வீடியோ வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து அவரிடம் போதை தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண் டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மும்பையிலிருந்து சொந்த ஊரான மனாலிக்கு கமாண்டோ படை பாதுகாப்புடன் புறப்பட்டு சென் றார்.
பாலிவுட்டில் நடிகர்கள் நடத்தும் பார்ட்டிகளில் போதை மருந்து இலவ சமாக தரப்படுகிறது என்ற பேச்சு தற்போது பாலிவுட்டினர் கடுமையான எதிர்ப்பு காட்டி வருகின்றன்ர்.
கமல்ஹாசனுடன் சாணக்யன். இந்தியன் படங்களில் நடித்த ஊர்மிளா கங்கனாவை தாக்கி இருக்கிறார். அவர் கூறும்போது,’பாலிவுட்டில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக கங்கனா கூறுகிறார். அவரது சொந்த ஊரான இமாச்சல பிரதேசம்தான் போதை பொருளின் பிறப்பிடமாக இருக்கிறது. அங்குதான் அவை உற்பத்தி செய்யப்படுகிறது. சொந்த மாநிலத்தை சுத்தப்படுத்திவிட்டு பிறகு அவர் மும்பை வரட்டும்’ என்றார்.