கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிgள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலியில் பங்கேற்றுள்ளனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டஉள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சுமார் 11 நாட்களுகக்கு பிறகு, அவரது உடல் இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலுக்கு திமுக அமைச்சர், எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, கிராம மக்கள், உறவினர்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, மாணவி அஞ்சலி உடலுக்க அவரது குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தி, அவருக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை செய்தனர். இதைத்தொடர்ந்து, மாணவியின் உடல் இறுதி அஞ்சலிக்கு அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. இதில், , மாணவியின் உறவினர்கள், உள்ளூர் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போது மாணவியின் உடல் புதைக்க முடிவு செய்யப்பட்டு ஜேசிபி வாகனம் மூலம் புதைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை முடிவில் திடீரென பிரச்னை ஏற்பட்டால், குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யலாம் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவியின் இறுதிச்சடங்கையொட்டி அசம்பாவவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் குறிப்பாக பெரியநெசலூர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நான்கு அடுக்கு சோதனைச் சாவடி, இறுதிச் சடங்கில் கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.