தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உருவாகும் கலியுகம் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தை இயக்குநர் பிரமோத் ஷங்கர் இயக்குகிறார். ஹாரர் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம், கலியுகம் என்றால் என்ன? கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? என்பதை போல் உருவாக்கப்பட இருக்கிறது.

அதோடு, 2050 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த உலகம் எப்படியிருக்கும் என்பது போன்று செட் அமைக்கப்பட்டு படம் உருவாக்கப்பட இருக்கிறது.

பிரமோத் சுந்தர் இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமுக்கு உதவியாளராக பணியாற்றிய ராம்சரண் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிரைம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கே எஸ் ராமகிருஷ்ணா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.