சென்னை:

ன்று காணும் பொங்கலையொட்டி, தமிழகத்தின் சுற்றுலாப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.  பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பொங்கல் பண்டிகையின் 3வது நாளான இன்று சென்னை உள்படபல பகுதிகளில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இன்றைய நாளை உற்சாகமுடன் குதுகளிக்கும் வகையில் சுற்றுலாத்தலங்களை நாடுவது வழக்கம். அதன்படி, இன்று சென்னை மக்கள் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்பட பல்வேறு சுற்றுலாப் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதையொட்டி,  சென்னை மெரினா கடற்கரையில் காணும் பொங்கலையொட்டி ஐயாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெசனட் நகர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொழுபோக்கு இடங்களிலும் மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மெரினா கடற்கரையில் இன்று பல்லாயிரக்கணக்கனோர் கூடும் நிலையில்,   உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை ஆகிய இரு இடங்களிலும் = தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு  காண்காணிக்கப்படுகிறது. மெரினா உட்புறச்சாலையில் 11 இடங்களில் காவல் உதவி மையங்களும், 7 ஆம்புலன்ஸ், 2 தீயணைப்பு மீட்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மணற்பரப்பில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணிக்க தனிக்குழுவும் தயார் நிலையில் உள்ளனர். 3 ஆளில்லா குட்டி விமானம் மூலமும் கண்காணிக் கப்படுகிறது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் என்பதால் கடலில் யாரும் இறங்காமல் இருக்க தடுப்பு வேலிகளை அமைக்கப்பட்டு 16 குதிரை படைகளும், 7 மணலில் செல்லும் டெரைன் வாகனம் மூலம் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகர காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

அதுபோல,   கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்க ஏதுவாக பெற்றோரின் செல்போன் எண் எழுதிய காவல் காப்பு என்ற அடையாள அட்டை கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சுற்றுலாத்தலங்களான பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் நகர், மாதா கோவில், அறுபடை முருகன் கோவல், அஷ்டலட்சுமி கோவில், சிறுவர்பூங்கா,  கோவளம் கடற்கரையிலும் வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் பொருட்காட்சி நடைபெறும் தீவுத்திடல் ஆகிய இடங்களிலும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.