இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையும் இரண்டாவது படம் காலா.    இவர்கள் கூட்டணியில் உருவான கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் இந்தப் படத்தை ரஜினிகாந்த் மருமகன் தனுஷ் தயாரித்து வருகிறார்.   இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்றா பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராஜசேகர் என்பவர் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும் இந்தப் படத்தை தடை செய்யவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.   மேலும் காலா என்னும் பெயரை உபயோகிக்க தடை விதிக்க கோரி உள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.   நீதிபதி,  இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த்,  இயக்குனர் ரஞ்சித்,  தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் தென்னிந்திய வர்த்தக சபை ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.