சென்னை,

காலா திரைப்படம் மீது தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடைபெற்று முடிந்தது.

அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட   படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காலா படத்திற்கு தடை விதிக்கக்கோரி விண்மீன் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், தான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த கரிகாலன் தலைப்பையும், கதையின் மூலக்கருவினையும் நடிகர் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி ரஜினிகாந்த்தை வைத்து படம்கு தயாரித்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக அவர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்ப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க மேலும்   2 வாரம் கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.