பிப். 19 ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று பரப்புரை மேற்கொண்டார்.

170 வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.ஏ. முத்தழகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “60 வயதாகும் முத்தழகன் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர். பகுதி வளர்ச்சிக்காக பாடுபடக் கூடியவர்” என்று கூறி அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

வாழப்பாடியார் தலைவராக இருந்த காலம் தொட்டு மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரசில் சேர்ந்து ஆற்றல் மிகு தளபதியாக செயல்பட்டு வந்த முத்தழகனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் வாழப்பாடி இராம. சுகந்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.