டிகை ஜோதிகா நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் 4ந்தேதி தொடங்குவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளது.

பிரபல நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா திருமணத்திற்கு பிறகும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து ஏற்கனவே வெளியான படங்கள் சூப்பர் ஹிட்  வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து,  இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்த படத்தின் பெயர்,  “காற்றின் மொழி”. இப்படத்தின் படபிடிப்பு வரும் ஜூன் 4-ம் தேதி முதல் தொடங்குவதாக  படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

நடிகை வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற படம்  “தும்ஹாரி சுலு”. இந்த படத்தின் கதை தமிழில் தயாராக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ராதாமோகன் இயக்க நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார். இவரது கணவராக நடிகர் வித்தார்த் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது காற்றின் மொழி படத்தின் படபிடிப்பு வரும் ஜூன் 4-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.