சமீபத்தில் நாச்சியார் படத்தின் மூலம் மீண்டும் நடிகை ஜோதிகா பிசி ஆகி உள்ளார்.   அடுத்ததாக செக்கச் சிவந்த வானம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.    அந்த படம் அனேகமாக ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என சொல்லப்படுகிறது.

 

அதற்குப்  பின் வித்யாபாலன் நடித்த துமாரி சுலு என்னும் இந்திப்படத்தின் தமிழாக்கத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.    இந்தப் படத்தில் சுலோசனா என்னும் குடும்பத்தலைவி வேடத்தில் வரும் வித்யாபாலன் பிறகு எஃப் எம் ரேடியோவில் ஜாக்கி ஆகிறார்.    அதைத் தொடர்ந்து அவருக்கு வரும் பிரச்னைகளைக் கொண்டு துமாரி சுலு இந்திப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தமிழாக்கத்தில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார்.   இந்தப் படத்தை ராதா மோகன் இயக்குகிறார்.    ஜோதிகா திருமணத்துக்கு முன்பு நடித்த மொழி என்னும் வெற்றிப்படத்துக்குப் பின் நீண்ட நாட்கள் கழித்து இருவரும் இந்தப் படத்தில் இணைகின்றனர்.