டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் உதய் உமேஷ் லலித் (யுயு லலித்). அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளது  உதய் உமேஷ் லலித்  இன்று பதவி ஏற்றார்.  ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நீதிபதி உதய் உமேஷ் லலித்துக்கு, தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள யுயு லலித்  பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே உள்ளது. வரும் நவம்பர் 8ஆம் தேதி யுயு லலித் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து மீண்டும் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார்.