டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 9,520 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், 12,875 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

நேற்று ஒரேநாளில் புதிதாக மேலும் 9,520 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,98,696 ஆக உயர்ந்தது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 87,311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,597 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,875 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 4,37,83,788 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2,11,13,94,639 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 31,60,292  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.