உச்சநீதிமன்றத்தால் ஆறு மாத சிறை தண்டனை  விதிக்கப்பட்ட கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை மறு பரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம்.  இதையடுத்து கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார், சென்னை வந்தனர். ஆனால் கர்ணன் இருக்கும் இடத்தை அவர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், கர்ணன் சார்பாக உச்சநீதிமன்றத்தி்ல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார் எனறும், தனது கைது உத்தரவு தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க இருக்கிறார் என்றும் அதனால் தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..