சென்னை: உடல்நலமில்லாமல் கடந்த சில நாட்களாக சிகிச்சை  பெற்று வந்த பத்திரிகையாளர் கோசல்ராம் இரவு காலமானார். அவரது மறைவு குறித்து செய்தியறிந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

கோசல்மறைவு குறித்து இரங்கல் செய்தி கொடுத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன்,

தாங்க முடியாத துயரம். ஒரு பத்திரிகையாளராக எனக்கு அறிமுகமாகி பின்பு பாசமிகு சகோதரராக அன்பைப் பொழிந்த ஊடகச் சகோதரர் திரு. கோசல்ராம் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்று நினைக்கும்போது மனம் அதிர்ச்சிக்குள்ளாகிறது. பலருக்கு அன்பை கொடுத்த அந்த இதயம் தன்னை இயக்க முடியாமல் நின்று விட்டது என்பதை மனது நம்ப மறுக்கிறது. சிகிச்சை அளித்து எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்று திட்டமிட்டது பொய்த்து போனது வேதனை…
இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வாக இருந்தபோது பாசமிகு இந்த இதயம் தன்னை கோசலிடமிருந்து மாற்ற வேண்டாமென தானாக நிறுத்திக்கொண்டதோ? என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.