ஹிரோஷிமா

ப்பானில் நடைபெற்று வரும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியை தேடிச் சென்று தழுவி உள்ளார்.

நேற்று ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அருகே அமர்ந்திருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து ஆரத் தழுவி வாழ்த்து கூறினார்.

இருவரும் சிறிது நேரம் உரையாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஜி 7 மாநாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், பங்கேற்றுள்ளார். இவரும் பிரதமர் நரேந்திர மோடியும் நெருங்கிய உறவினர்களைப் போன்று ஆரத் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

உலகில் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 200 தலைவர்கள் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.  அதுவும் குறிப்பாக அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கிறார். இதனால் சர்வதேச அரங்கில் இந்தியர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அனைவரும் புகழ்கின்றனர்.