டிகர் ஜெயம் ரவி தனக்கான கதைகளை தேர்வு செய்து நடித்து கவர்கிறார். பெரும் பாலும் குடும்பபாங்கான கதைகளை தேர்வு செய்கிறார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல படங்கள் அவரை பெண்கள் மனதில் கொண்டு சேர்த்திருக்கிறது. அதேசமயம் தனி ஒருவன் , கோமாளி, டிக்டிக்டிக் போன்ற படங்கள் வெகு ஜனங் களிடம் அவரை சேர்த்திருக்கிறது அடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
ஜெயம் ரவிக்கு வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிறந்தநாள்.

இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
என் அன்பிற்கினிய ரசிகர்களே, இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை சிறப்படையச் செய்கிறது. ஆனால் இந்த வருடம் உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். கொண்டாட்டங்களையும், கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை. கொண்டாட்டங்களுக்கு பதிலாக நான் எப்படி உதவி தேவைப் பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படு பவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப்போராடி வெற்றிபெறுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

,