ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், தண்டனையில் இருந்து அவர்விலக்கப்பட்டார். ஆனால் தனி நீதிமன்றத்தில் ஏற்கெனவே அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதம் அப்படியே இப்போதும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை அவரது சொத்துக்களில் இருந்து பறிமுதல் செய்யப்படும். தவிர, ஏற்கெனவே அவரது சொத்துக்கள் சில பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

800 கி.கி வெள்ளி, 750 ஜோடி செருப்புகள், 10,500 புடவைகள் மற்றும் 91 கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களை வழக்கிற்காக இணைத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த

ஜெயலலிதா அப்போது

பொருட்கள் கர்நாடகாவில் பெங்களூரு சிவில் கோர்ட் வளாகத்தில் முதல் மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை இரவு பகலாக ஆயுதப்படை காவலர்கள்  பாதுகாத்து வருகின்றனர்.

தங்க நகைகளின் மதிப்பு ரூ. 3.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா தனது அபிடவிட்டில் இதே சொத்துக்களை தெரிவித்துள்ளார்

செப்டம்பர் 27, 2014 அன்று இந்த வழக்கின் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றத்தில் அறிவித்தார் சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருடங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சரி, இப்போது விசயத்துக்கு வருவோம்.

ஜெயலலிதாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட புடவைகள், நகைகள், தங்க வளையல்கள், ஒட்டியானம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள், வெள்ளி வாள் என பல கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட  பொருட்கள் அனைத்தும் தற்போது ஜெயலலிதாவின் நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கின்றன.

ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைத்திருக்கும் நிலையில்,  இந்த  பொருட்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும்.