சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி உள்ளார். பல்வேறு சம்மன்களுக்கு ஆஜராகாத நிலையில், இன்று ஆஜராகி உள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில்,  2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விசாரணை சூடுபிடித்துள்ளது. மார்ச் மாதம்  7ந்தேதி முதல் விசாரணை தொடர்ந்து வருகிறது. ஏற்கன  சில அப்போலோ மருத்துவர்கள் ஆஜரான நிலையில்,  மார்ச் 21ந்தேதி ஓபிஎஸ், சசிகலா உறவினர்ல இளவரசி ஆகியோர் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்படி, இன்று  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆஜரானார். அதுபோல முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ்-சும் ஆஜராகி உள்ளார்.

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தபோது, முதல்வர் பொறுப்பை கவனித்துவந்தவர் ஓபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ. மர்ம மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா உறவினர் இளவரசி ஆஜர்…