சென்னை:

ஜெயலலிதா வீடியோ வெளியிட்ட வழக்கில் வெற்றிவேல் முன்ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் கடந்த 20ம் தேதி வெளியிட்டார். இது குறித்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜெயலலிதா மரண விசாரணை கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வெற்றிவேல் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிவேல் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அவருடைய முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.