சென்னை:

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்  வீட்டை தமிழகஅரசு கையகப்படுத்துவதை எதிர்த்து ஜெ.தீபக் தொடர்ந்த வழக்குஇரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்வதாக உயர்நிதிமன்றம் அறிவித்து உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது வேதா இல்லம், நினைவில்லம் ஆக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் சட்டப்படி வாரிசுகள் அவரின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ.  தீபக் மற்றும் ஜெ. தீபா  என்று  உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்த நிலையில், ஜெ. இல்லத்தை கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை கைவிட கோரி தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

இந்த வழக்கையும்,  தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவித்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட பரிந்துரை செய்துள்ளது.
இரு வேறு தீர்ப்புகள் வருவதை தவிர்க்க வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்துள்ளர்.