சென்னை:

ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை செய்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் உறவினரும், ஜெயா டிவியின் நிர்வாகியுமான விவேக் இன்று 2வது முறையாக ஆஜராகி உள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்  தொடர்பாக , நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதல், சசிகலாவின் உறவினர்கள் வரை  35க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்துள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வளர்ந்த  ஜெயா டிவி சி.இ.ஓ விவேக் ஜெயராமனுடன் ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் விசாரணை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே கடந்த மாதம் 13ம் தேதி ஆஜரான விவேக்கிடம், நீதிபதி ஆறுமுகசாமி 4 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் விவேக் ஆணையத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.