டில்லி,
மறைந்த தமிழக முதல்வருக்கு இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார்.
smithra
இன்று காலை பாராளுமன்றம் கூடியது, அப்போது சபாநாயகர் கூறியதாவது,
சிறந்த நிர்வாகத்தன்மை கொண்டவர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதாவின் மறைவு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டுக்கே மிகப் பெரிய இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவு அரசியலில் ஒரு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறினார்.