மும்பை: பிசிசிஐ அமைப்பின் செயலாளராக உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ஜெய்ஷாவின் மகன், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவல், பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் தெரியவந்துள்ளது.

பொருளாளர் அருண் துமல் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, ”ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள். உங்களுடைய தலைமையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உச்சத்தை அடையும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

ஆசிய கிரிக்கெட் வீரர்கள் நன்மை அடைவார்கள். பதவியில் வெற்றிகரமாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்” என்றுள்ளார் அருண் துமால்.