தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பன்மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் துபாயில் மர்மமான முறையில் தண்ணீர் தொட்டியில் மரணமடைந்தார். அவரது அந்த திடீர் மரணம் திரையுலகினர் மட்டுமல்லாமல் அவர் ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

இந்நிலையில் அன்னையர் தினத்தன்று அவரது மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சிறுவயதில் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அம்மாவை கவனியுங்கள், அம்மாவிற்கு உலகத்தின் உள்ள எல்லா அன்பையும் வழங்குங்கள் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.