சென்னை: நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி பதவிகளுக்கான தேர்வு ஜனவரி11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி, நாளை (9ந்தேதி) நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த,  கட்டடக் கலை திட்ட உதவியாளர் தேர்வு & ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ் தெரிவித்தது. அதற்கு அரசும் அனுமதி தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று (8ந்தேதி) நடைபெறவுள்ள கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் நாளை (10ந்தேதி)  நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி பதவிகளுக்கான தேர்வு ஜனவரி11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் 11-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வை எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.