கடலூர்,

டலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சியினர் காளையுடன் கைது செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து இன்று கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி  ஜல்லிக்கட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தினர்.

கைது செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்

இதையறிந்த போலீசார், தடையைமீறிய குற்றத்திற்காக  நாம் தமிழர் கட்சினர் 28 பேர் கைது செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டு காளைகளை  கொண்டு வந்த ஒரு லாரி மற்றும் 4 ஜல்லிக்கட்டு காளைகள் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.