மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போது நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார். காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள், பார்வையாளர்கள் கேலரி, மாடுபிடி வீரர்களுக்கு  மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

இதனிடையே மதுரை ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும்  14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.