சென்னை: தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது என்று விமர்சித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போலீஸ் அதிகாரிகள் உடந்தையும் போதைப்பொருட்களை கடத்தி உள்ளார். அதனால், அவர் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-   தமிழகத்தில் எங்கு பார்த்தா லும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.  கஞ்சா போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. போலீஸ் அதிகாரிகள் துணையோடுதான் ஜாபர் போதை பொருட்களை கடத்திய உள்ளார் என குற்றம் சாட்டியவர்,  காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளது, காவல்துறையினர் தற்போது ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மாறி உள்ளனர் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும், போதை பொருள் கடத்திய  ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளதான டிஜிபி கூறுகிறார், அப்படி இருக்கையில், அவர் டி.ஜி.பி.கையில் விருது பெறுகிறார் என்றவர்,  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க. நிர்வாகி தொடர்பில் பல ஆண்டுகளாக இருந்துள்ளார். இதுதொடர்பாக  செய்தி வெளிவந்த பிறகே ஜாபர் சாதிக் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதனால், போதை பொருள் கடத்தல் தொடர்பாக, ஜாபர் சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்திய எடப்பாடி பழனிச்சாமி,  தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  இந்த ‘முக்கியமான பிரச்சினை குறித்து  முதலமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும், ஆனால், பதில் பதில் அளிக்காமல் ஆர்.எஸ்.பாரதி மூலம் பதில் அளிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

எடப்பாடியின் இந்த பேட்டியின் போது தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள்! டிஜிபி சங்கர் ஜிவால் ஓப்பன் டாக்…