சென்னை:

மிழகத்தில்  இன்று அமைச்சர் கே.சி.வீரமணி அலுவலகம் உள்பட 31 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி எய்ப்பு புகார் காரணமாக இந்த ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி. இவரது சொந்த ஊரான, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை. இகுள்ள அவரது  வீடு மற்றும் திருமண மண்டபம், ஓட்டல்கள் மற்றும் அவரது அரசியல் நேர்முக உதவியாளர் சீனிவாசன் உள்பட்ட அமைச்சரின் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே இடையம்பட்டியில் அமைச்சரின் அலுவலகத்தில் ரெய்டு நடக்கிறது.  நில விவகாரத்தில் அமைச்சர் வீரமணி பேசும்போது எடுக்கப்பட்ட ரகசிய வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

அரசியல் நேர்முக உதவியாளர் சீனிவாசன் உட்பட்ட அமைச்சரின் உறவினர்களி ன் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

இந்த சோதனையில்,  அமைச்சர் கே.சி வீரமணியின் மண்டபத்தை நிர்வகிப்பவர் வீட்டில் கைப்பை சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் உள்ளதாகவும், அது அமைச்சருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று வருமான வரித்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.