சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதல்  20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உஎள்ளது.

பிரபல மருந்து வணிக நிறுவனமான கவரிலால் பார்மாசூடிக்கல்ஸ் ( Kawarlal pharmaceutical) நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட  20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சௌகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மாதவரம் நடராஜன் நகரில் தனியார் குடோனிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,  ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரம் விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம் குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரிஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.