சென்னை:

மிழகத்தில் செய்யது பீடி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

நெல்லையை தலைமையிடமாகக் கொண்ட செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை இன்று காலை ஏழு மணி முதல் நடந்துவருகிறது. .

நெல்லை, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

முறையாக வரி செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Type a messa