கமதாபாத்

ஸ்ரோ சந்திரனுக்கு அடுத்தபடியாக சூரியனுக்கு ஆதித்யா எல் 1  விண்கலத்தை செப்டம்பர் 2 ஆம் தேதி செலுத்த உள்ளது.

நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் நிலவுத் திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்கி ஆய்வுப் பணியைத் தொடங்கி உள்ளது. இ?ஸ்ரோ தனது அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குநர் நிலேஷ் எம்.தேசாய், ஆதித்யா-எல்1 தயார் நிலையில் உள்ளதாகவும், செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவ வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆதித்யா விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டது.  பி எஸ் எல் வி ராக்கெட் மூலம் இந்த விண்கலம், ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவத் திட்டமிடப்பட்டு உள்ளது.

சுமார் 1,475 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம் பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஆதித்யா எல் 1 என்னும் இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்குத் தகவல்களைப் பெற முடியும்.