சென்னை:

க்களின் வரிப்பணத்தின் மூலம், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது அவசியமா? தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடு, வேதா இல்லம் என்ற பெயரில் சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. இதை, நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில்,  சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வேதா நிலையத்தை, வெறும் 35 கோடிக்கு அரசு வாங்குவதாக தமிழகஅரசு கூறி உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றவேண்டியதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.  கோடநாட்டில் ஜெயலலிதா தங்கியிருந்தார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா?” என கேட்ட நீதிமன்றம்,  “ஜெயலலிதாவின் புகழை பரப்புவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவின் புகழைத்தான் பாடுகின்றனர் என்று கடுமையாக சாடினார்.

இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.