பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் தாய் சயீதா பேகம் வயது மூப்பின் காரணமாக நேற்று (26.04.20) காலமானார். அவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.

கடும் ஊரடங்கு காரணமாக அவரால் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.

இர்ஃபான் கான் லாக்டவுன் காரணமாக, லண்டனில் சிக்கிக்கொண்டதால் தனது அம்மாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள இயலவில்லை . அவரின் தாய் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வந்தார்.

வீடியோ காலின் மூலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தனது தாயின் இறுதிச் சடங்கைப் பார்த்து அழுதார் இர்ஃபான் கான்.